• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாலாவுடன் சண்டையா ?- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா!

May 26, 2022 தண்டோரா குழு

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வருகின்றார்.சூர்யாவின் 41 ஆவது படமாக உருவாகும் இப்படத்தை சூர்யா தனது 2D நிறுவனம் சார்பாக தயாரித்து வருகின்றார்.

இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா மற்றும் பாலா இப்படத்தில் மீண்டும் இணைவதால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.சமீபத்தில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்யாகுமரியில் நடந்து முடிந்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சமீபத்தில் சூர்யா சென்னைக்கு திரும்பினார். இதற்கிடையில், சூர்யா மற்றும் பாலா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் பாலாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சர்ச்சைக்கு முற்றுபுள்ளியும் வைத்துள்ளார்.

மேலும், சூர்யா இப்படத்தில் காது கேளாத மீனவராக நடிக்கிறாராம்.மேலும் சூர்யா அப்பா மற்றும் மகன் என இரு கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.

மேலும் படிக்க