• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

படபிடிப்பில் காட்டுயானை பீதியடைந்த ‘டிக் டிக் டிக்’ குழு

April 17, 2017 தண்டோரா குழு

“மிருதன்” படத்தை எடுத்த சக்தி செளந்தர்ராஜன், அடுத்ததாக இயக்கிவரும் படம் ‘டிக் டிக் டிக்’. இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். இந்தியாவின் முதல் விண்வெளி சார்ந்த படமாகும்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில், கேரளாவின் மூணார் பகுதியில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. அப்போது அழையா விருந்தாளியாக வந்த காட்டு யானையை பார்த்து படக்குழுவினர் பீதியடைந்துள்ளனர். காரணம், ஆணையிறங்கல் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் அறிந்து தாங்கள் அஞ்சியதாக இயக்குனர் சக்தி கூறினார்.

ஆனால், அந்த யானைகளோ அருகில் இருந்த ஏரியில் தண்ணீர் குடித்துவிட்டு திரும்பிவிட்டதாம். அதன்பின்னரே அனைவருக்கும் நிம்மதிப் பெருமூச்சு வந்திருக்கிறது. என்ன… நிவேதா பெத்துராஜ் தான் கொஞ்சம் அதிகமாக பயந்துவிட்டாராம்.

ஜெயம் ரவி, நிவேதா கலந்துக் கொண்ட அந்த படப்பிடிப்பு கடந்த வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க