• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென்னிந்திய நடிகர் சங்கம் பெயரை மாற்றும் வரை எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கமாட்டேன்-பாரதிராஜா!

April 13, 2018 tamilsamayam.com

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றாவிட்டால் சங்கம் நடத்தும் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டேன் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

திரைத்துறையினர் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை,காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்னைகளுக்காக கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது.இந்தப் போராட்டம் வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.இந்தப் போராட்டத்தில் சினிமாவை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொள்ளவில்லை. அதில் முக்கியமாக இயக்குனர் பாரதிராஜா கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து பாரதிராஜாவிடம் “நீங்கள் ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை? என்றதற்கு, “ஒவ்வொரு மாநிலத்திலும்,அந்தந்த மாநிலத்தின் பெயரில் தனித்தனியாக நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது.கேரளாவில் “கேரள நடிகர்கள் சங்கம்”,கர்நாடகாவில் “கர்நாடக நடிகர்கள் சங்கம்”, ஆந்திராவில் “ஆந்திர நடிகர்கள் சங்கம்” என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.ஆனால்,இங்கு மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்று இருக்கிறது.அந்தப் பெயரை தமிழக நடிகர்கள் சங்கம் என்று மாற்றும்வரை,அந்த சங்கம் நடத்தும் எந்த நிகழ்ச்சியிலும்,போராட்டங்களிலும் பங்கேற்க மாட்டேன்” என்றார்.

மேலும் படிக்க