• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துல்கர் சல்மானின் நான்கு அவதாரங்கள்

September 8, 2017 தண்டோரா குழு

மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகனும் மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோக்களுள் ஒருவராகவும் இருந்து வருகிறார் துல்கர் சல்மான்.

இவர் தற்போது பிஜாய் நம்பியார் இயக்கத்தில் ‘சோலோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழியிலும் தயாராகி வருகிறது.

இப்படத்தின் கதை நீர், நெருப்பு, காற்று, நிலம் என இயற்கையை உணர்த்து விதமாக இருப்பதோடு இதில் துல்கர் நான்கு சிவ அவதாரங்களில் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சேகர், திரிலோக், ருத்ரா, சிவா ஆகிய நான்கு அவதாரம் பற்றியும், சிவ தத்துவத்தை பற்றியும் கூறப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு சிவ தாண்டவத்தை கொண்டு தீம் அமைக்கப்பட்டுள்ளதாம்.

இரண்டு காதல் கதைகள், இரண்டு போராட்ட கதைகள் என இப்படத்தில் பல அம்சங்கள் நிறைந்துள்ளது. இதனால் துல்கர் சல்மான் ரசிகர்கள் இப்படத்தினை எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் படிக்க