• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ் சினிமாவில் வீரமாதேவியை அடுத்து அரசியல் வேடத்தில் களமிறங்கும் சன்னிலியோன்

March 18, 2019 தண்டோரா குழு

உலகின் மூலைமுடுக்கெங்கும் ரசிகர்களை கொண்டவர் சன்னிலியோன். கவர்ச்சி நாயகியாக தொடங்கி பின்னர் பாலிவுட் கதாநாயகியானர். இந்திய சினிமாவில் தனக்கென தனியிடத்தை தக்கவைத்துள்ளவர் நடிகை சன்னிலியோன்.

பாலிவுட்டில் சினிமாவில் தற்போது முக்கிய கதாநாயகியாக திகழ்ந்து வரும் சன்னி லியோன் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஜெய்யுடன் ஆடியதன் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து வீரமாதேவி படத்தில் ஒப்பந்தமாகி நடித்துவருகிறார் வி.சி. வடிவுடையான் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார் ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது.

சன்னிலியோன் சிறந்த டான்சரும் கூட இந்தப் படத்துக்காக, வாள் சண்டை மற்றும் குதிரையேற்றம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு நடித்திருக்கிறார். படப்பிடிப்பு வேலை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் வடிவுடையான் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் சன்னிலியோன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த படம் அரசியல் கதையாக உருவாகவுள்ளது எனவும் படத்திற்கு டில்லி என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கதையை கேட்ட உடனேயே சன்னி லியோன் சம்மதம் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதி பெண்ணாக சன்னி லியோனின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த கட்டமாக தற்போது இந்த படத்திற்கான துணை நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க