• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்புவுடன் முதல் முறையாக கைகோர்க்கும் மணிரத்னம்

September 11, 2017 tamilsamayam.com

காற்று வெளியிடை படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்கத் தயாராகி வருகிறார் இயக்குநர் மணிரத்னம். இந்தப் படத்திற்கான நடிகர்கள் தற்போது தேர்வு நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்கு நடிகர் சிம்பு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கவுள்ள இப்படத்தில் ஏற்கனவே விஜய்சேதுபதி, துல்கர் சல்மான், நானி, பகத் பாசில் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் நடிக்க, நடிகர் சிம்பு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவிற்கு இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்பதால் மற்ற ஹீரோக்களுக்கு சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக இப்படத்தில் ஹீரோயின்களாக நடிக்க சாரா அலிகான, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் யார் யாருடன் ஜோடி சேர்வார்கள் என்பதை படம் வெளியாகும்போதுதான் தெரியவரும்.

மேலும் படிக்க