• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவா கடற்கரையில் சமந்தா, நாக சைதன்யா திருமணம்!

July 7, 2017 தண்டோரா குழு

நடிகை சமந்தா – நாக சைதன்யா திருமணம் அக்டோபர் 6-ம் தேதி கோவாவில் ஓர் அழகான கடற்கரையில் நடைபெறவுள்ளது.

தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா. நடிகரான இவரும் தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகை சமந்தாவும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர்.

இதையடுத்து இருவீட்டார் சம்மந்தத்துடன் ஜனவரி 29-ம் தேதி இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

இதற்கிடையில், இவர்கள் திருமணம் வெளிநாட்டில் நடக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதை மறுத்த நாக சைதன்யா, திருமணம் அக்டோபர் 6-ம் தேதி நடக்கிறது. இந்தியாவில் தான் நடக்கும். இடம் இன்னும் முடிவாகவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கோவாவில் அழகான கடற்கரையில் தங்கள் திருமணம் நடைபெற இருப்பதாக நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க