• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கையில் ஏற்பட்ட காயத்துடன் கேரள மக்களுக்கு உதவ களமிறங்கிய நடிகை அமலா பால்

August 18, 2018 தண்டோரா குழு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது.100ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத கனமழையால், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 324 உயிரிழந்துள்ளனர்.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணி போர் கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் பேரழிவை சந்தித்திருக்கும் கேரள மாநிலத்திற்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை அமலாபால் சமீபத்தில் அதோ அந்த பறவை போல படத்தின் சண்டை காட்சி படமாக்கப்பட்ட போது கையில் தசை நார் கிழிந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது அமலாபாலும் கேரள மக்களுக்காக களத்தில் இறங்கியுள்ளார்.கையில் ஏற்பட்ட காயத்துடன் கேரளா மக்களுக்கு தேவையான பொருட்களுடன் களமிறங்கியுள்ளார். அமலாபாலின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.

மேலும் படிக்க