• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கெளதம் மேனன் படத்தில் இணைந்த மூன்றாவது இயக்குநர் !

July 17, 2018 தண்டோரா குழு

சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் கெளதம் மேனன் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’,தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.

‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’ பி.மதனுடன் இணைந்து கெளதம் மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

தனுஷ் ஹாலிவுட் படம்,மாரி 2 படத்தில் பிஸியாக இருந்ததால் இப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில்,இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது.இதற்கிடையில்,எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகரும்,இயக்குனருமான சசிக்குமார் இணைந்துள்ளதாக கெளதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.மேலும்,இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க