• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிரைம் த்ரில்லர் வகையிலான படங்களை இயக்க திரைப்பட இயக்குநர் மிஷ்கினுக்கு தடை

December 24, 2018 தண்டோரா குழு

கிரைம் திரில்லர்’ படம் எடுக்க இயக்குனர் மிஷ்கினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

பைனான்சியர் ரகுநந்தன் என்பவர் இயக்குனர் மிஷ்கின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில்,கடந்த 2015-ஆம் ஆண்டு தன் மகனை நடிக்க வைத்து படம் எடுப்பதற்காக இயக்குனர் மிஷ்கினிடம் ரூ. 1 கோடி கொடுத்ததாகவும், ஆனால் அவர் ஒப்பந்தப்படி படம் எடுக்கவில்லை என்றும், தமக்கு நியாயம் கிடைக்கும் வரை அவரது கிரைம் திரில்லர் பாணி படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், மனுதாரரிடம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள கதையின் அடிப்படையில், வேறு திரைப்படத்தை இயக்கி வெளியிட இயக்குனர் மிஷ்கினுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.மேலும் ஜனவரி 2-ம் தேதிக்குள் மனு குறித்து இயக்குனர் மிஷ்கின் பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.
தற்போது, இயக்குநர் மிஷ்கின் உதயநிதி ஸ்டாலினை நாயகனாக வைத்து சைக்கா என்ற கிரைம் திரில்லர் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க