• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார்த்திக் நரேனின் அடுத்த படம்  ‘ நாடக மேடை ‘

February 15, 2018 தண்டோரா குழு

‘துருவங்கள் 16’ படத்தின் வெற்றி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாது பல பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டை பெற்றது.

அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்குநர் கெளதம் மேனனின் ஒன்றாக பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘நரகாசுரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அர்விந்த் சாமி, ஸ்ரேயா,சுந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்து இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. விரைவில் அப்படம்  திரைக்குவரவுள்ளது.

இந்நிலையில், தனது மூன்றாவது படம் குறித்து இயக்குநர் கார்த்திக் நரேன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். நாடக மேடை என அப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இன்றைய நவீன சமூகத்தில் இளைஞர்களின் கண்ணோட்டம் எப்படி உள்ளது என்பதை பற்றிய படம் இது கார்த்திக் நரேன் கூறியுள்ளார். விரைவில் இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

மேலும் படிக்க