• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கருணாநிதி இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த பிக்பாஸ் போட்டியாளர்கள்

August 8, 2018 தண்டோரா குழு

திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உலகமெங்கும் வாழும் தமிழக மக்கள்
இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரோமோ வெளியானது. அதில், பிக்பாஸ் தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி நேற்று மாலை இறந்ததாக தெரிவித்தார்.இதனைக்கேட்டு பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அவருடைய ஆன்மா சாந்தியடைய அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு பிக்பாஸ் தெரிவிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றது.

இதற்கிடையில், தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியானது. அதில், கருணாநிதியின் மறைவை கேட்டு மகத் கண் கலங்குகிறார். இதனையடுத்து, டேனியல் கலைஞரின் பிரபலமான வசனத்தை பேசுகிறார். இதைத்தொடர்ந்து பாலாஜி, தமிழ் என்று சொன்னாலே நமக்கு ஞாபகம் வருவது அந்த கருப்பு கண்ணாடியும், மஞ்சள் துண்டும் தான் என கலைஞரை குறிப்பிட்டு பேசுகிறார்.

மேலும் படிக்க