• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எஸ்பிபி என் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் – ரஜினிகாந்த் !

October 4, 2021 தண்டோரா குழு

சிறுத்தை சிவா இயக்கத்தில் சான் பிக்சர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த. இப்படம் பொங்கலன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில்,இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது. இப்பாடலை மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலா சுப்ரமணியம் பாடியுள்ளார். இது அவரது கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் என்று பத்துவிட்டுள்ளார்.

மேலும் படிக்க