• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

”எல்லா புகழும் அஜித் ரசிகர்களுக்கே”- விநியோகஸ்தர் உருக்கம்..!

March 21, 2017 tamilsamayam.com

வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தை தமிழகத்தில் அதிக தியேட்டர்களில் வெளியிட காரணம், அஜித் ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு தான் காரணம் என விநியோகஸ்தர் நரேந்தரன் தெரிவித்துள்ளார்.

அஜித் நடிப்பில் வெளியான வீரம் படம் தெலுங்கில் ‘கட்டமராயுடு’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் பவன் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ளார். வரும் 24-ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. கட்டமராயுடு படத்திற்கான தமிழக வெளியீட்டு உரிமையை நாகா மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும் தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 150 திரையரங்குகளில் நேரடி தெலுங்கு படமான ‘கட்டமராயுடு’ படத்தை வெளியிட அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அதிகமான தியேட்டர்களில் கட்டமராயுடு படத்தை திரையிட, அஜித் ரசிகர்களின் ஆதரவே காரணம் என நாகா மூவிஸ் நிறுவன தலைவர் நரேந்திரன் தெரிவித்துள்ளார். “இந்த முயற்சிக்கு முக்கிய காரணம் அஜித் ரசிகர்கள் தான். இந்த படம் வீரம் படத்தின் ரீமேக் என்பதால், படத்தை பிரபலப்படுத்த அஜித் ரசிகர்கள் மிகவும் உதவியாக இருக்கிறார்கள்.

தமிழகத்தில் பவன் கல்யாணுக்கென குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் இருக்கிறது. மேலும் இது அஜித் சாரின் படம் என்பதால், அவரின் ரசிகர்களும் படத்தை பார்க்க விரும்புகிறார்கள். எனவேதான் தைரியமாக இந்த முயற்சியை எடுத்துள்ளேன்.” என நரேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க