• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

என்னை மக்களுக்கு கொண்டு சேர்த்தது அம்மாவும் நீயே பாடலும் தான்: கமல்ஹாசன்

April 26, 2018 tamilsamayam.com

என்னை மக்களுக்கு கொண்டு சேர்த்தது அம்மாவும் நீயே என்ற பாடலும் தான் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“களத்தூர் கண்ணம்மா”படத்தில்,நடிகர் கமல் குழந்தை நட்சத்திரமாக வாயசைத்த “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே….” பாடலையும்,அதற்கு முன்பாக “பராசக்தி” படத்தில் “ஓ…ரசிக்கும் சீமானே… ” , “செங்கமலத்தீவு” படத்தில்,”பேசியது நான் அல்ல … ” ,”குமுதம்” படத்தில் “மியாவ் மியாவ் பூனை குட்டி… ” மற்றும்,”பாப்பா பாடும் பாட்டு….”,”நாயகன்” படத்தில் “நான் சிரித்தால் தீபாவளி…” உள்ளிட்ட மிகவும் பிரசித்தி பெற்ற,நூற்றுக்கணக்கான பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி (85).இவர் கடந்த சில மாதங்களாக கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் உடல் நலம் குன்றி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் இயற்கை எய்தினார்.

எம்.எஸ்.ராஜேஸ்வரியின் இறுதி சடங்கு இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை- 44,குரோம்பேட்டை சி-103 எம்.ஜி.ஆர்.தெரு,சோழாவரம் நகர் பகுதியில் உள்ள அவரது மூத்த மகளது இல்லத்தில் இருந்து புறப்பட்டு,குரோம்பேட்டை மயானத்தில் நடைபெறவுள்ளது.

எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு வெங்கடேசன் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.இவரது இளைய மகள் ஆர்த்தியும் இளம் பின்னணி பாடகியாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்து, இதே நாளில் அகால மரணம் அடைந்த துக்கமும் எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க