• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இசைஞானியை முந்திய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

April 13, 2018 தண்டோரா குழு

இந்தியாவின் முக்கிய இசைமைப்பாளர்கள் என்றால் இசைஞானி இளையராஜா,இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் என்றே சொல்லாம்.இதில் ஏ.ஆர் ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்ந்துள்ளார்.எனினும்,தேசிய விருதை ஏ.ஆர் ரஹ்மானை விட இளையராஜா தான் அதிகம் பெற்றிருந்தார்.

இந்நிலையில்,65வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.ஆஸ்கார் விருதில் தன் இசைக்காக இரண்டு விருதுகளை இந்தியாவிற்கு அள்ளி வந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். தற்போது மீண்டுமொரு சாதனையை தன் வசமாக்கியுள்ளார். ஆம்!இரண்டு தேசிய விருதுகளை ஒரே நேரத்தில் பெற்றுள்ளார். தேசிய விருதுகள் வரலாற்றில் இப்படி ஒரே சமயத்தில் இரண்டு விருதுகளை பெறுவது இதுவே முதல்முறை.

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இதற்கு முன் ரோஜா,மின்சாரக் கனவு,லகான்,கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்கு தேசிய விருது பெற்றுள்ளார்.தற்போது மாம்,மற்றும் காற்று வெளியிடை படத்திற்கு தேசிய விருது பெற்றுள்ளார்.இதன் மூலம் இசைப்புயல் மொத்தம் 6 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.இதற்கு முன் 5 தேசிய விருதுகளைப் பெற்ற இசைஞானி இளையராஜாவே முதலிடத்தில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க