April 24, 2017
தண்டோரா குழு
நடிகர் தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியாகிய படம் ப.பாண்டி. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை ரேவதி நடித்துள்ளார். படத்தில் அவரது நடிப்புக்கு அதிக அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், ப.பாண்டி படத்தை பார்த்து நடிகை சுஜா வருணி தனது டுவிட்டரில் கண்ணீர் விட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.அதில், இந்த வீடியோவை ரேவதிக்கு சமர்ப்பிப்பதாகவும் மீண்டும் ரேவதிக்கு நல்ல ரீ எண்ட்ரி கொடுத்ததற்காக இயக்குனர் தனுஷுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.