• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரஜினியிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் – ராதிகா ஆப்தே

April 22, 2017 தண்டோரா குழு

ரஜினியிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

கோவை அவினாசி சாலை அண்ணா சிலை அருகே தனியார் அழகுக்கலை கூடம் திறப்பு விழாவில் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நடிகர் ரஜினிகாந்த் மனிதநேயம் மிக்கவர் மற்றும் பண்பானவர் என்றும் அவரிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். திரையில் அவரை பார்த்து ரசித்த எனக்கு அவருடன் நடித்தது சிறப்பானது என்றார்.

மொழி காரணமாக தமிழை காட்டிலும் இந்தி திரைப்படங்களில் நடிப்பது தனக்கு எளிமையாக இருப்பதாக குறிப்பிட்ட ராதிகா ஆப்தே கபாலிக்கு பிறகு தமிழ் படங்கள் எதுவும் ஒப்பந்தமாகவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் , இந்திய சினிமா துறையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைக்கதைகள் குறைவு என்றும், அது அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் ராதிகா ஆப்தே வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க