• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாகுபலி 3 கதை ரெடியானால் படம் நிச்சயம் எடுப்பேன்– ராஜமெளலி

May 5, 2017 தண்டோரா குழு

பாகுபலி என்ற கதையை வைத்து இரண்டு பாகங்களை இயக்கி ராஜமெளலி இந்திய சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தியுள்ளார். இதுமட்டுமின்றி இந்திய அளவில் பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதில்,கடந்த 28ம் தேதி வெளியிடப்பட்ட பாகுபலி 2 படத்தின் வசூல் ரூ.1000 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது திரையிலகினர் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாகுபலி 3 வெளிவருமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். பாகுபலி 2 படத்திற்குக் கிடைத்துள்ள உற்சாக வரவேற்பை தொடர்ந்து, பாகுபலி 3 விரைவில் எடுக்க ஆர்வமாக உள்ளேன் என்று இயக்குனர் ராஜமவுலி கூறியுள்ளார்.

ராஜமெளலி கடந்த 2015ம் ஆண்டே இதுபற்றி டுவிட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்,
அதில்,” பாகுபலி 3 எடுக்க ஆர்வமாக இருக்கிறேன். விரைவில் அது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனது தந்தை இதற்கான கதையை தயார்செய்துவிட்டால், படம் நிச்சயம் எடுக்கப்படுவது உறுதி”, எனக் கூறியுள்ளார்.

இதனால், பாகுபலி 3 பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என, ராஜமவுலி ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் படிக்க