• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அஜித்தை தொடர்ந்து சிம்புவுக்கு நடுக்கடலில் பேனர் வைத்த சிம்பு ரசிகர்கள்

January 28, 2019 தண்டோரா குழு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் பிப்.1ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இதனால் சிம்பு ரசிகர்கள் பலரும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், சிம்பு தனது ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்டு கட் அவுட், பேனர்களுக்கு அண்டாவில் பாலபிஷேகம் செய்யுமாறு ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் தங்களது பாச வெறியை வெளிப்படுத்த ஆயத்தமாகி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் சிம்பு கட் அவுட்டிற்கு அவரது ரசிகர்கள் ஆண்டாவில் பாலபிஷேகம் செய்தனர்.

இந்நிலையில் தற்போது சிம்பு ரசிகர்கள் நடுக்கடலிலும் வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்தின் பேனரை வைத்து அசத்தியுள்ளனர். இச்சம்பவம் புதுச்சேரியில்
நடந்துள்ளது. இதற்கு முன் தல அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தான் இது போன்ற சம்பவம் முதல் முறையாக நடைபெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க