• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேயர் அறையில் பொதுமக்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் – மாநகராட்சி மேயர்

March 4, 2022 தண்டோரா குழு

மேயர் அறையில் பொதுமக்கள்
என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என கோவை மாநகராட்சி மேயர் கல்பனா கூறியுள்ளார்.

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா நிருபர்களிடம் கூறியதாவது:

கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக என்னை அறிவித்து எனக்கு இந்த உயரிய பதவியை வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த அறிய வாய்ப்பை வழங்கிய முதல்வருக்கும், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும், மின்சாரத்துறை அமைச்சருக்கும், மாமன்ற உறுப்பினர்கள், தோழமை கட்சியினர் அனைவருக்கும் நன்றியை
தெரிவித்துக்கொள்கிறேன்.

கோவை மாநகராட்சியின் உள்ள பொதுமக்கள் அனைவரையும்நானே நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து அதை நிறைவேற்ற
பாடுபடுவேன்.கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அறையில் பொதுமக்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்.

நான் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன். திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைவரும், தமிழக
முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்
அடிமட்ட உறுப்பினராக இருந்த என்னை உயரிய பதவியில் அமர வைத்து அழகு பார்த்துள்ளார். அவரது பெயருக்கு பெருமை சேர்க்கும்
வண்ணம் நான் பணியாற்றுவேன்.

மாநகராட்சி கமிஷனர்,
மின்சாரத்துறை அமைச்சர், மாநகராட்சி அதிகாரிகளோடு கலந்தாலோசித்து மாநகராட்சியை மேம்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் தடை
இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்வேன். தெருவிளக்கு, சாலை வசதி, குடிநீர் வசதி, குப்பைகளை சுத்தம் செய்தல், மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்துதல், கோவை மாநகர
அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க