• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாளை பதவி ஏற்க்கும் கவுன்சிலர்கள்! 6 வருடங்களுக்கு பின் மாமன்றம் புதுப்பிக்கும் பணி தீவிரம்!

March 1, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நாளை கோவை டவுன்ஹாலில் உள்ள விக்டோரியா ஹாலில் பதவியேற்க உள்ளனர்.

புதிய கவுன்சிலர்களை வரவேற்கும் விதமாக மாநகராட்சி மாமன்ற அலுவலகம் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.அங்கு கவுன்சிலர்கள் அமரும் இருக்கை,மேஜைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு போடப்பட்டுள்ளது.மாநகராட்சி வளாகம் முழுவதும் வர்ணம் பூசப்பட்டு சுத்தம் செய்யும் பணியும் நடக்கிறது.6 வருடங்களாக பயன் படுத்தபடாமல் இருந்ததால் ஓடுகள் ஆங்காங்கே உடைந்து கிடந்தன.அவை அகற்றப்பட்டு புது ஓடுகள் போடப்பட்டு வருகிறது.

மேயர் அமரக் கூடிய இருக்கை,மேஜைகளும் போடப்பட்டுள்ளது.மேயர் பேசுவதை கேட்கும் வண்ணம் அரங்கம் முழுவதும் ஸ்பீக்கர்களும் வைக்கப்பட்டு உள்ளது.தற்போது மாநகராட்சியில் 60-க்கும் மேற்பட்ட பெண் கவுன்சிலர்கள் உள்ளதால் விக்டோரியா ஹால் பகுதியில் உள்ள கழிவறைகள் புனரமைக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆட்சியில் 72வார்டாக இருந்தது தற்போது 100வார்டாக அமைந்துள்ளது.இதற்கு ஏற்றவாறு தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க