• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்தல் நாளன்று தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்

February 18, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர்கள் சீனிவாசன் மற்றும் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடக்கிறது.தேர்தல் நடக்கும் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், அதில் பணி புரியும் அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் ஒரு நாள் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி கோவை மாவட்டத்தில் தேர்தல் நடக்கும் பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து தொழிற்சாலை நிர்வாகிகளும் தங்களது தொழிற்சாலைகளில் பணி புரியும் அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் தேர்தல் நாள் அன்று ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க