• Download mobile app
05 Aug 2025, TuesdayEdition - 3464
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொழிலதிபர் வீட்டில் புகுந்து தங்கம், வைரம் திருட்டு

February 16, 2022 தண்டோரா குழு

கோவையில் நள்ளிரவில் வீட்டில் புகுந்து தங்கம், வைரத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை நியூசித்தாபுதூர் பாலசுந்தரம் லே-அவுட்டை சேர்ந்தவர் பாபு(43). சொந்த தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மாடியில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். கீழ் தளத்தில் உள்ள அறையில் அவரது அம்மா இருந்தார். அவர் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கியதாக தெரிகிறது.

அப்போது நள்ளிரவில் நைசாக உள்ளே புகுந்த மர்ம நபர் 1 பவுன் தங்கம், 10 கிராம் வைரம், ஒரு வாட்ச் மற்றும் ரூ.4 ஆயிரத்தை திருடி கொண்டு சென்றுள்ளார். மறுநாள் காலையில் வீட்டில் திருடு போயிருப்பதை கண்டு பாபு அதிர்ச்சியடைந்தார். அவர் உடனே இது குறித்து காட்டூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கம், வைர நகைகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க