• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிஎன்சி ஆப்ரேட்டர் தற்கொலை

February 16, 2022 தண்டோரா குழு

கோவை போத்தனூர் சிட்கோ இந்திரா நகரை சேர்ந்தவர் சரவணன் (36).திருமணமாகாதவர். தனியார் நிறுவனத்தில் சி.என்.சி ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று மதியம் வேலை முடிந்து குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். நீண்ட நேரம் அவரது வீட்டு கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சரவணன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில், போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க