• Download mobile app
05 Aug 2025, TuesdayEdition - 3464
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை 32வது வார்டு பாஜக வேட்பாளரின் அதிரடி அறிவிப்பு !

February 15, 2022 தண்டோரா குழு

அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு கல்லூரியில் பயில மூன்று வருடங்களுக்கு முழு செலவுகளையும் தான் ஏற்றுக்கொள்வதாக 32வது வார்டில் பாஜக சார்பாக போட்டியிடும் புவனேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இம்முறை பா.ஜ.க.தனியாக தேர்தலை சந்தித்து,கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் பா.ஜ.க.வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இதில் கோவை மாநகராட்சி 32 வது வார்டில் பா.ஜ.க. வேட்பாளராக தாமரை சின்னத்தில் புவனேஷ்வரன் போட்டியிடுகிறார்.

இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.தாம் வெற்றி பெற்றால்,மத்திய அரசின் திட்டங்களை வார்டு பகுதி மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவேன்,எனவும், அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வேன் எனவும்,அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மேற்படிப்பிற்காக கல்லூரியில் படிக்க மூன்று ஆண்டுகளுக்கு தேவையான முழு செலவகளையும் தான் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார்.

மேலும் படிக்க