• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிறை கைதி சாவு

February 14, 2022 தண்டோரா குழு

கோவை கோவில்மேடு கே.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (48).இவர் கொலை வழக்கில் கைதாகி கடந்த செப்டம்பர் மாதம் கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

இவர் கடந்த 20 ஆண்டுகளாக ரத்த அழுத்தம் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சிறை மருத்துவர்கள் முதலுதவி அளித்து அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியில் இறந்ததாக தெரிவித்தனர். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க