• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வடமாநில தொழிலாளி உட்பட 2 பேர் தற்கொலை

February 11, 2022 தண்டோரா குழு

மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் தேபாசிஸ் பொரியா (34).இவர் கோவை இடையர் வீதியில் தங்கியிருந்து நகைப்பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில்,அவரது சொந்த ஊரில் சொத்து பிரச்னை காரணமாக அவரது பெற்றோருடன் சண்டை ஏற்பட்டுள்ளது.இதனால், மன உளைச்சல் அடைந்த தேபாசிஸ் பொரியா வாழ்க்கையில் விரக்தியடைந்து தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தகவல் அறிந்து சம்பவயிடத்துக்கு சென்று போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இது தொடர்பாக வெறைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.கோவை கணபதி 7வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (65). இவர் கடந்த மாதம் 25ம் தேதி மூச்சுத்திணறல் உள்ளதாக, கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றார்.அவரை பரிசோதனை செய்த போது, விஷம் அருந்தியது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் எதற்காக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க