• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாம்பூலம் தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளர்

February 10, 2022 தண்டோரா குழு

கோவை பேரூர்,பேரூராட்சி 7 வது வார்டு பகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தாம் வெற்றி பெற்றால் இந்த பகுதியில் நீண்ட காலமாக உள்ள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு காண்பேன் என தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம்,பேரூர், பேருராட்சியில் 7 வது வார்டில் தி.மு.க.சார்பாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் ராதாகிருஷ்ணன். இவர் அந்த பகுதி மக்களிடையே விநோத முறையில்,வாக்கு சேகரித்து வருகிறார்.தமிழக பாரம்பரிய முறைப்படி, சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுப்பது போன்று, தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் வைத்து வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகிறார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கடந்த எட்டு மாத கால தி.மு.க ஆட்சியில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தாம் வெற்றி பெற்றால் இந்த வார்டு பகுதியில் நீண்ட காலமாக உள்ள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு காண்பேன் என உறுதியளித்தார்.

மேலும் படிக்க