• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்கள் மாற்றத்தை விரும்ப தயாராக இருக்கிறார்கள் – 35 வது வார்டு பாஜக வேட்பாளர்

February 9, 2022 தண்டோரா குழு

மக்கள் மாற்றத்தை விரும்ப தயாராக இருப்பதாகவும்,தமிழகத்தில் இந்த தேர்தலில் பா.ஜ.க.மாபெரும் எழுச்சி பெறும் என பா.ஜ.க.சார்பாக 35 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இம்முறை பா.ஜ.க.தனியாக தேர்தலை சந்தித்து,கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் பா.ஜ.க.வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் கோவை மாநகராட்சி 35 வது வார்டில் பா.ஜ.க.வேட்பாளராக ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார். ஏற்கனவே வார்டு பகுதிகளில் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மூலம் அந்த பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமான இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகளால் அடிப்படை தேவைகள் சரியான முறையில் வார்டுகளில் நிறைவேற்றப்படவில்லை எனவும், இந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இரு கட்சிகளிடம் இருந்து மாற்றத்தை விரும்புவதால் பா.ஜ.க.மாபெரும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

பிரச்சாரத்தின் அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில்,

எங்கள் வீட்டு பிள்ளையாக வார்டில் போட்டியிடும் ரவிச்சந்திரனை வெற்றி பெற வைப்போம் என சூளுரைத்தனர். பிரச்சாரத்தின் போது பா.ஜ.க. பல்வேறு நிலை நிர்வாகிகள் மனோஜ், விஜயகுமார், ரகு ரவிச்சந்திரன் ,ராமசாமி, முத்துக்குமார், திருப்பதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க