• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை 77 வது வார்டு தி.மு.க.தேர்தல் அலுவலகம் திறப்பு

February 7, 2022 தண்டோரா குழு

கோவை 77 வது வார்டு தி.மு.க.தேர்தல் அலுவலகத்தை அன்னூர் ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்த் திறந்து வைத்தார்.

கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர் புற உள்ளாட்சி தேர்தலில்,மாநாகராட்சிக்கு உட்பட்ட 77 வார்டு பகுதியில் தி.மு.க.கட்சியின் வேட்பாளராக முனைவர் ராஜலட்சுமி போட்டியடுகிறார்.இந்நிலையில் 77 வது வார்டுக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக அன்னூர் ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்த் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் தி.மு.க மற்றும் மதசார்பற்ற கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.நிகழ்ச்சியில் 77 வது வார்டு வேட்பாளர் ராஜலட்சுமி, பகுதி செயலாளர் கேபிள் மணிகண்டன் உட்பட கூட்டணி கட்சியினர்,மகளிர் அணியினர் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க