• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை 77 வது வார்டு தி.மு.க.தேர்தல் அலுவலகம் திறப்பு

February 7, 2022 தண்டோரா குழு

கோவை 77 வது வார்டு தி.மு.க.தேர்தல் அலுவலகத்தை அன்னூர் ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்த் திறந்து வைத்தார்.

கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர் புற உள்ளாட்சி தேர்தலில்,மாநாகராட்சிக்கு உட்பட்ட 77 வார்டு பகுதியில் தி.மு.க.கட்சியின் வேட்பாளராக முனைவர் ராஜலட்சுமி போட்டியடுகிறார்.இந்நிலையில் 77 வது வார்டுக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக அன்னூர் ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்த் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் தி.மு.க மற்றும் மதசார்பற்ற கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.நிகழ்ச்சியில் 77 வது வார்டு வேட்பாளர் ராஜலட்சுமி, பகுதி செயலாளர் கேபிள் மணிகண்டன் உட்பட கூட்டணி கட்சியினர்,மகளிர் அணியினர் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க