• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

8 மாதமாக தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் – 78 வது வார்டு திமுக வேட்பாளர்

February 7, 2022 தண்டோரா குழு

கடந்த எட்டு மாதமாக தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கோவை மாநகராட்ச 78 வது வார்டு பகுதியில் தி.மு.க.சார்பாக போட்டியிடும் சிவசக்தி தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி 78 வது வார்டு பகுதியில் தி.மு.க.சார்பாக போட்டியிடும் சிவசக்தி செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்,இந்திரா நகர்,தேவேந்திர வீதி,உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கடந்த பத்து ஆண்டுகளாக எந்த வித அடிப்படை வசதிகளும் இந்த பகுதியில் ஏற்படுத்தப்படவில்லை எனவும்,கடந்த எட்டு மாதங்களாக தி.மு.க.ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறிய அவர்,தாம் 78 வது வார்டு பகுதி பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்துவேன் என உறுதியளித்தார்.

மேலும் படிக்க