• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் வாலிபர்கள் தப்பி ஓட்டம்

February 7, 2022 தண்டோரா குழு

கோவை அருகே கே என் ஜி புதூர் அருகே உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் மேலாளராக பணி புரிபவர் பிரபாகரன். நேற்று இரவு 9 50 மணிக்கு வந்த வாலிபர்கள் ரூபாய் 800 க்கு பெட்ரோல் போடும்படி கூறினர்.

இதையடுத்து அவர் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்கும்படி கேட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர்கள் இருவரும் பணம் கொடுக்காமல் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றனர்.இதனை கண்ட பிரபாகரன் மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த வாலிபரின் கையை பிடித்து தடுத்து நிறுத்த முயன்றார்.ஆனால் அவர் நிலைதடுமாறி அருகிலிருந்த தடுப்பில் மோதினார்.

இதுகுறித்து புகாரின் பேரில் துடியலூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர் பெட்ரோல் போட்டு விட்டு பணம் கொடுக்காமல் வாலிபர்கள் தப்பி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க