• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தலையில் கல்லை போட்டு பெண் கொலை – கோவையில் பயங்கரம்

February 5, 2022 தண்டோரா குழு

கோவை சுங்கம் பைபாஸ் ரோட்டில் தனியார் இருசக்கர வாகன ஷாரும் உள்ளது. அதன் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்துள்ளார்.இதை பார்த்த அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவயிடத்துக்கு சென்று, விசாரித்தனர்.இதில்,மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததும்,5 நாட்கள் முன்பு கொலை நடந்து உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பிரேத பரிசோதனையில் கொலையான பெண் 5 மாதம் கர்ப்பிணி என தெரியவந்துள்ளது. ஆனால், அந்த பெண் யார்? எந்த ஊர்? உள்ளிட்ட விபரங்கள் தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க