• Download mobile app
06 Aug 2025, WednesdayEdition - 3465
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பூட்டிய வீடுகளில் 14 பவுன் கொள்ளை

February 3, 2022 தண்டோரா குழு

கோவை கோவில்பாளையம் அருகே உள்ள வரதங்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகந்தன் (43), தனியார் நிறுவன ஊழியர். இவர், நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை பிரசவத்திற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருந்தார். இதனால் இவரும், குடும்பத்தினரும் சம்பவத்தன்று மருத்துவமனைக்கு சென்று விட்டனர்.‌

அப்போது யாரோ வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த 12 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்று விட்டனர். இதேபோல் கோவில்பாளையம் பிரிமியர் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (55). இவர், தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார் . மீண்டும் வீடு திரும்பியபோது கதவு பூட்டு உடைந்து கிடந்தது. வீட்டில் வைத்திருந்த இரண்டு பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது.

கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க