• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

February 3, 2022 தண்டோரா குழு

தனியார் வானொலி மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

கொரொனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம் தனியார் நிறுவனங்களும் தனியார் அமைப்புகளும் அரசாங்கத்துடன் இணைந்து பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் வானொலி(சூரியன் எப்.எம்), தனியார் நிறுவனங்கள் சார்பில் 3 கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகனங்கள் ஒரு வாரத்திற்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளும். SMS (Soap, Mask, Social distance) என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், கோவை மாவட்ட ஆட்சியர்கள், கோவை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனை முதல்வர்கள் பேசிய விழிப்புணர்வு உரைகள் ஒலிப்பரப்பப்பட உள்ளன.

மேலும் படிக்க