• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் மீட்பு ஸ்வீட் கடை உரிமையாளர்கள் மீது வழக்கு

January 29, 2022 தண்டோரா குழு

கோவையில் ஸ்வீட் கடையில் பணிக்கு அமர்த்தப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை தெலுங்குபாளையம் ராஜேஷ்வரி நகரில் உள்ள கவின் மற்றும் எம்.கே ஸ்வீட் கடையில் குழந்தை தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதாக தேசிய குழந்தை தொழிலாளர்கள் திட்ட அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து கோவை மாவட்ட குழந்தை தொழிலாளர் திட்ட அதிகாரி பீஜூ அலெக்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தபட்ட கடையில் சோதனை செய்தனர்.அப்போது, 9 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் 2 பேரை ஸ்வீட் கடையில் பணிக்கு அமர்த்தியது தெரியவந்தது.

இது தொடர்பாக செல்வபுரம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சிறுவர்களை பணிக்கு அமர்த்திய ஸ்வீட் கடை உரிமையாளர்கள் செல்வபுரம் தெலுங்கு பாளையத்தை சேர்ந்த தவசியப்பன் அடைக்கலம் (31), செல்வபுரம் சொக்கம்புதூரை சேர்ந்த கண்ணன் (41) ஆகிய இருவர் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் குழந்தை தொழிலாளர்கள் 2 பேரும் மீட்கப்பட்டனர்.

மேலும் படிக்க