• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 10 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

January 28, 2022 தண்டோரா குழு

கோவை மாநகர போலீசில் 10 போலீஸ்இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இதில் சரவணம்பட்டி போலீஸ்நிலையத்தில் வெடிகுண்டு கண்டறிதல் பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த செந்தில்குமார், அதே போலீஸ் நிலையத்தில் குற்ற புலனாய்வு இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டு உள்ளார்.

இதுபோன்று போத்தனூர் சிறப்பு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கதிர்வேல் அதே போலீஸ்நிலையத்தில் குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், ரத்தினபுரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா அதே போலீஸ்நிலைய சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், ரத்தினபுரி தீவிர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், குனியமுத்தூர் போலீஸ் குற்ற புலனாய்வு இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி மாநகர சிறப்பு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், மேற்கு மண்டலத்தில் பதவி உயர்வு பெற்ற பாஸ்கரன் குனியமுத்தூர் குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், பதவி உயர்வு பெற்ற செல்வராஜ் மாநகர வெடிகுண்டு கண்டறிதல் பிரிவு இன்ஸ்பெக்டராகவும், பதவி உயர்வு பெற்ற கிருஷ்ணவேணி மாநகர தீவிர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், நாககவிதா மாநகர நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டராகவும், திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றிய சாந்தி சைபர் கிரைம் மண்டல ஆய்வக இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க