• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய முக்கியச் சாலைகள்

January 23, 2022 தண்டோரா குழு

முழு ஊரடங்குயொட்டி முக்கியச் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது.

தமிழக அரசு நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவித்துள்ளது இதனையொட்டி கோவை காந்திபுரம், ரயில் நிலையம், டவுன் ஹால், லட்சுமி மில், வடகோவை, பூ மார்க்கெட், ராமநாதபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது.

பொதுமக்கள் அனாவசியமாக யாரும் வெளியே வரவேண்டாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.கோவையில் முக்கிய சாலை பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனையை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. கோவை மற்றும் அரசு மருத்துவமனைகளில் 14528 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் 170 மைக்ரோ கண்டைன்மெண்ட் ஜூன் கண்டறியப்பட்டு அந்த பகுதியில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

நோய் தொற்று சிகிச்சை மேற்கொள்பவர்களை விட சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விடும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.மேலும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க