• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு சட்டை கிடந்ததால் பரபரப்பு

January 19, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கருவூல மையத்தின் பாதுகாப்பு அறைக்கு அருகில் பாம்பின் தோல்கள் கிடந்துள்ளன. இதனை கண்ட மைய பணியாளர்கள் அலுவலக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அதிகாரிகள் மீட்பு பணி துறையினருக்கு தகவல் தெரிவித்து அங்கு வந்த மீட்பு பணி துறையினர் பாம்பை தேடும் முயற்சியில் ஈடுப்பட்டனர். ஆனால் பாம்பு தென்படாததால் அவர்கள் திரும்பி சென்றனர்.அந்த அலுவலகம் நீண்ட நாட்களாக தூசடைந்து காணப்படுவதால் இது போன்ற உயிரிகள் வரக்கூடும் என்றும் எனவே அறையை தூய்மை செய்யும் படியும் மீட்பு பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பல மக்கள் வந்து செல்லும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு சட்டை கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த பாதுகாப்பு அறையில் 24 மணி நேரமும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுவதால் அவர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட கூடும்.மேலும் கிடைத்த பாம்பின் தோல் நல்ல பாம்பின் தோல்கள் என மீட்பு பணி துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க