• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் 92 சதவீதம் பேருக்கு பொங்கல் தொகுப்பு விநியோகம்

January 17, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கடந்த 4-ம் தேதி முதல் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வரை 92 சதவீதம் பேருக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம், பச்சாபாளையம் உள்பட 9 இடங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் இருந்து, 1045 ரேஷன் கடைகளுக்கு இட வசதிக்கு ஏற்ப பொருட்கள் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. தற்போது அந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

கோவை மாவட்டத்தில் 1,405 ரேஷன் கடைகளில் சுமார் 11 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களில் 10 லட்சத்து 78 ஆயிரத்து 484 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெற தகுதியானவர்கள் ஆவர். இவர்களில் இதுவரை சுமார் 9 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு பொங்கல் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதாவது 92 சதவீதம் பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க