• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளை தலைமை நீதிபதிக்கு கடிதம்

January 12, 2022 தண்டோரா குழு

வழக்கு விசாரணைக்காக காணொலிக்காட்சி மூலம் ஆஜராவதால் தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக வழக்கறிஞர்கள் சிரமத்துக்குள்ளாவதாக கோவை வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளை தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து கோர்ட்டுகளில் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டு, காணொலிக்காட்சி மூலம் விசாரணை நடத்தபட்டு வருகிறது. இதன் காரணமாக வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த 10 ஆம் தேதி கோவை பார் கவுன்சில் செயற்குழு கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த தீர்மானங்கள் அடங்கிய நகலை மதுரை உயர் நீதிமன்ற கிளை தலைமை நீதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், அனைத்து நீதிமன்றங்களிலும் பிணை வழக்கு விசாரணைக்கு நேரடியாகவும், காணொலிக்காட்சி மூலமும் அனுமதிக்கப்பட வேண்டும், சிறப்பு வழக்குகள் என பட்டியலிடப்பட்டது தொடர்பான விவரங்களை சம்மந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும், வழக்கறிஞர்கள் தங்களின் வசதிகளுடன் நீதிமன்றங்களில் ஆஜராவதற்கும் அனுமதி அளிக்க வேண்டும், பிணை வழக்குகள் குறிப்பிட்ட தேதிகளில் நடத்தவும், இரு வழக்கறிஞர்களின் ஒத்த முடிவுகளுடன் அந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் ஆகிய 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க