• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாளையாறு சோதனை சாவடியில் ரூ.3 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது

January 12, 2022 தண்டோரா குழு

கோவையில் இருந்து வாளையாறு வழியாக கேரளாவிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக கேரள சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் தமிழக கேரள எல்லையான வாளையாறு சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அவர்கள் ஒவ்வொரு வாகனங்களையும் நிறுத்தி முழுவதுமாக சோதனை செய்தனர்.

அப்போது கோவையில் இருந்து ஆழப்புழா நோக்கி சென்ற பேருந்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் சுங்கதுறை அதிகாரிகள் பேருந்தில் ஏறி ஒவ்வாரு பயணிகளின் உடமைகளையும் கவனமாக சோதனை மேற்கொண்டனர். அப்போது பேருந்தில் இருந்த ஒரு பையில் சந்தேகத்திற்கிடமான வகையில் பொருட்கள் இருந்தன.

இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறையினர் அதனை தனியாக எடுத்து சோதனை செய்தனர். அப்போது அது அதிக போதை தரும் ஹாசிஸ் ஆயில் எனப்படும் ஒரு வகை போதைப்பொருள் என தெரியவந்தது. மொத்தம் 11 கிலோ போதைப்பொருள் அந்த பையில் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.3 கோடியாகும்.

இதுதொடர்பாக குமரி மாவட்டத்தை சேர்ந்த பிரமோத் என்பவரை பிடித்து சுங்கத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க