• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மருதமலை வனப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் 200 கிலோ அகற்றம்

January 12, 2022 தண்டோரா குழு

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரம் பகுதியிலிருந்து கோவிலுக்கு செல்லும் சாலை 2 கி.மீ தூரம் உள்ளது. இச்சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் மக்கும் குப்பைகளை சேகரிக்கும் பணி நடைபெற்றது.

மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோட்ட உதவி வனப்பாதுகாவலர், வனச்சரக அலுவலர், சரக பணியாளர்கள் 25 பேர் மற்றும் மருதமலை மலைவாழ் மக்கள் கிராமத்தை சார்ந்த துப்புரவு பணியாளர்கள் 10 பேர் கொண்ட குழுவினரால் சுத்தம் செய்யபட்டது. இதில் பிளாஸ்டிக் குப்பைகள் சுமார் 200 கிலோ அளவில் சேகரிக்கப்பட்டது.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் கோவில் அருகே அமைந்துள்ள கடைகளுக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க