• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மருதமலை வனப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் 200 கிலோ அகற்றம்

January 12, 2022 தண்டோரா குழு

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரம் பகுதியிலிருந்து கோவிலுக்கு செல்லும் சாலை 2 கி.மீ தூரம் உள்ளது. இச்சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் மக்கும் குப்பைகளை சேகரிக்கும் பணி நடைபெற்றது.

மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோட்ட உதவி வனப்பாதுகாவலர், வனச்சரக அலுவலர், சரக பணியாளர்கள் 25 பேர் மற்றும் மருதமலை மலைவாழ் மக்கள் கிராமத்தை சார்ந்த துப்புரவு பணியாளர்கள் 10 பேர் கொண்ட குழுவினரால் சுத்தம் செய்யபட்டது. இதில் பிளாஸ்டிக் குப்பைகள் சுமார் 200 கிலோ அளவில் சேகரிக்கப்பட்டது.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் கோவில் அருகே அமைந்துள்ள கடைகளுக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க