• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடிய கோவை குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள்

January 12, 2022 தண்டோரா குழு

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையில் மிக முக்கிய பண்டிகையானது பொங்கல் திருநாள்.தை மாதத்தில் வரும் இந்நாளில் தமிழர்கள் சூரிய பகவானிற்கு நன்றி சொல்லும் விதமாக மண் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக கோவை நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் 14ஆம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது.வளாகம் முழுவதும் கரும்பு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, பாரம்பரிய இசையுடன் மண்பானையில் பொங்கல் வைத்து குலவையிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.

இதில் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் விஜயகுமார்,செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் கௌதமன், துணை தலைவர் கண்ணன், இணைச்செயலாளர் நிர்மலாதேவி, கலையரசன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் நிர்வாக குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க