• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 240 சிறப்பு பேருந்துகள்

January 12, 2022 தண்டோரா குழு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு
கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்து துறை கோவை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு தொழில் நகரமான கோவையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இதனால் பஸ்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதை தவிர்க்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டத்தின் சார்பில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை கடலூர் உள்ளிட்ட ஊர்களுக்கும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல் மார்க்கம் செல்லும் பஸ்களும், கொடிசியா மைதானத்தில் இருந்து சேலம், திருச்சி, தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும், உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி, பழனி, உடுமலை, வால்பாறை, மதுரை, தேனி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இதன்படி கோவையில் இருந்து மதுரைக்கு 100 பேருந்துகள், சேலம் மற்றும் திருச்சிக்கு தலா 50 பேருந்துகளும், தேனிக்கு 40 பேருந்துகள் என 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவையில் இருந்து இயக்கப்படும் விரைவு பேருந்துகளில் கோவை, மதுரை, கும்பகோணம் ஆகிய மூன்று மண்டலங்களின் சேர்த்து கிட்டத்தட்ட ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், கொடிசியா மைதானம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையங்களுக்கு போதுமான இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கொரோனா பரவலை முன்னிட்டு அரசின் வழிகாட்டுதலின்படி 75 சதவீத பயணிகள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் பேருந்துகளில் பயணிகள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்படுவார்கள் எனவும் முககவசம் பயணிகள் அணியாத பேருந்துகளில் ஏற அனுமதி கிடையாது எனவும் கோவை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க