• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு – இந்து முன்னனி ஆதரவாளர் உட்பட இரண்டு பேர் கைது

January 11, 2022 தண்டோரா குழு

கோவை வெள்ளலூர் பகுதியில் பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில் இந்து முன்னனி ஆதரவாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு செருப்பு மாலை மற்றும் காவி பொடியை வீசி மர்ம நபர்கள் அவமதித்து சென்றனர். இதை கண்டித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில் பெரியார் சிலையை அவமதித்த வெள்ளலூரை சேர்ந்த இந்து முன்னனியை ஆதரவாளர் அருண் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரை போலிசார் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க