• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு – இந்து முன்னனி ஆதரவாளர் உட்பட இரண்டு பேர் கைது

January 11, 2022 தண்டோரா குழு

கோவை வெள்ளலூர் பகுதியில் பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில் இந்து முன்னனி ஆதரவாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு செருப்பு மாலை மற்றும் காவி பொடியை வீசி மர்ம நபர்கள் அவமதித்து சென்றனர். இதை கண்டித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில் பெரியார் சிலையை அவமதித்த வெள்ளலூரை சேர்ந்த இந்து முன்னனியை ஆதரவாளர் அருண் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரை போலிசார் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க