• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

January 10, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியரிடம் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் உபைதூர் ரஹ்மான் தலைமையில் மனு ஒன்றை அளித்தனர்.

அதில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 56 வது வார்டில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் கழிப்பிட கழிவுநீரை கொட்டி வருவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் துர்நாற்றத்தை சுவாசித்து நோய் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும்,தொடர்ந்து அந்தப் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் டெங்கு காய்ச்சல் பரவல் அதிக ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதேபோல 100வது வார்டு பகுதியில் தெரு நாய்கள் அதிகம் காணப்படுவதால் குழந்தைகள் மற்றும் இரவு நேரங்களில் மக்கள் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து தெரு நாய்களை பிடிக்குமாறு மனுவில் குறிப்பிட்டுள்ளது.இதேபோல கோவை மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட இடங்களை விரைவில் சரி செய்ய கோரியும் இதனால் விபத்துகள் நிகழ ஏற்பட வாய்ப்புள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த மனுவின் போது அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ஆலடி ஆனந்த், மாவட்ட துணைச் செயலாளர் செல்வபுரம் சேகர், தொண்டரணி செயலாளர் சரத் சக்தி, மகளிர் அணி துணை செயலாளர் மேரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க