• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநகராட்சிக்கு சொந்தமான வாடகை செலுத்தாத கடைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்

January 7, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள், கடைகள் போன்றவற்றில் பல மாதங்களாக வாடகை செலுத்தாத கடைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சியில் கிழக்கு, மேற்கு, மத்திய, வடக்கு, தெற்கு மண்டலம் என ஐந்து மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள் உள்ளன. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் மாநகராட்சி வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் 200க்கும் மேற்பட்ட கடைகள் பல மாதங்களாக மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வருகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மாநகராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

” கோவை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் உள்ள கடைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இக்கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வாடகை செலுத்தாமல் இயங்கி வரும் கடைகளுக்கு, அவர்கள் மாநகராட்சியில் வைப்புத் தொகையாகச் செலுத்தியிருந்த தொகையில் இருந்து வாடகை கழிக்கப்படும்’’ என்றார்.

மேலும் படிக்க