• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பதிவுச்சான்று பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

January 5, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பதிவுச்சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட மாவட்ட சமீரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பதிவுச்சான்று பெற்று செயல்பட வேண்டும். ஜனவரி 31ம் தேதிக்குள் பதிவு சான்று பெற விண்ணப்பிக்கலாம்.

அவ்வாறு பதிவு சான்று பெறாமல் செயல்படும் தொண்டு நிறுவனத்தின் செயல்பாட்டினை நிரந்தரமாக நிறுத்தம் செய்யப்படும்.
பதிவு சான்று பெறுவதற்கான விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் படிக்க